வலியின் வலி...!


இனிய தமிழினமே,
உனக்குள் உணர்வென்ற ஒன்று இருக்கும் என்றால்....
உயிர் ஒன்று உனக்குள் உள்ளது என்றால்...
ஒரு முறை அந்த ஈழத்தைப் பார்...
உணர்வுகலந்த கண்களால்....!
உன் உற்ற உறவு
உயிர் வேண்டி அழுகிறது...

உறவுதான் அது...
மடத்தனமான மதத்தால் அல்ல
உனக்குத் தாய்மொழி தமிழென்றால்...
உன் உறவுதான் அது...

அவன் தவிப்பு
உனக்கும் வரும்...
மலேசியனே....! உனக்கும் வரும்...

தலைகொடு... தடுக்க எழு...!
இதையும் ... இனி வரும் அதையும்...!

இல்லையெனில்...
ஆணாய் இருந்தால் அறுத்தெறி உறுப்பை...
பெண்ணெனில்..... பிறப்பை மறுத்திடு..

தமிழ் உயிரை நாய்களுக்குத் தராதே...!

Comments

Popular posts from this blog

பொங்கல் வைப்போம்

உனக்கது பிடிக்குதா சொல்...?