Posts

Showing posts from February, 2006

தோராயமாக ...!

நல்லவை நிலைத்திருக்க ... அல்லவை நினைவழிக்க ... ஏற்றவழி என் இறைவா ஏன் இன்னும் சொல்லவில்லை ? என் நடையின் தவறோ...? எடுத்தவழி பிழையோ அடுத்துவந்து துரத்துதய்யா - நான் வெறுத்துவந்த நினைவு வலி எவன் கேட்டும் சொல்லாத நீ இவன் கேட்டா சொல்லி விடுவாய்... ? இருந்தபோதும் இதய ஓரம் எழுகிறதே நப்பாசை... ! துல்லியமாய் வேண்டாம் தோராயமாக வேனும்...!