சிதைந்த மனம்
எழுதிய கவிதையில் பிழைகள் வந்தால் இருமுறை படித்துத் திருத்தலாம்... இருக்கும் வாழ்வில் தவறுகள் வந்தால் எதனைக் கொண்டு திருத்த நான்..? முள்ளாய்ப் பாதை கிடக்கும்போது முகையென நினைக்க உருத்துதே இல்லாப் பொருளின் இலக்கியம்கூட இந்த வாழ்க்கையில் கசக்குதே... பயணம் இதுவெனத் தெரியா ஒருவன் பாதை கண்டிட வழியுண்டோ காணும் பாதையில் காலடி தொடர்ந்தால் காணாப் பயணம் கரையுண்டோ... வகையே தெரியா கேள்விகளால்- நான் வதங்கி வதங்கி வாடுகிறேன்... பகையே தெரியா உறவுகளால் - நான் பாசம் வேண்டி புலம்புகிறேன்...