Posts

Showing posts from 2006

அழகே..!

Image
இமைகள் கொன்றாய் இதயம் பெற்றாய் எந்தன் உயிரை எழுதிக் கேட்டாய் இருந்த அனைத்தும் எடுத்தாய் அழகே என்ன கொடுப்பாய் எனக்கு

தோராயமாக ...!

நல்லவை நிலைத்திருக்க ... அல்லவை நினைவழிக்க ... ஏற்றவழி என் இறைவா ஏன் இன்னும் சொல்லவில்லை ? என் நடையின் தவறோ...? எடுத்தவழி பிழையோ அடுத்துவந்து துரத்துதய்யா - நான் வெறுத்துவந்த நினைவு வலி எவன் கேட்டும் சொல்லாத நீ இவன் கேட்டா சொல்லி விடுவாய்... ? இருந்தபோதும் இதய ஓரம் எழுகிறதே நப்பாசை... ! துல்லியமாய் வேண்டாம் தோராயமாக வேனும்...!