Posts

Showing posts from January, 2009

எஃது அருமை?

மத்தளமா மனிதனில் தமிழன்? இருபுறமும் அடிவாங்கி எப்போதும் கிடக்கிறான்! இருக்கணுமா இனியும் தமிழன்? பொறுத்தே பொங்கியெழ நேரம் பார்க்கிறான்! சுருங்கிய நிலைமைக்குச் சுட்டலாமோ விரலை மங்கிய வாழ்க்கைக்கு மடத்தனந்தான்;மறந்தான் அறுத்தெரிய வேண்டாமோ எச்சில்உமிழ் வாயை கருத்துக்களின் வாதங்கள் வெறும் கழுத்தறுப்பே.. அவன்வருவான் இவன்வருவான் அதுவெல்லாம்பொய் அடிவேரை அறுத்தெரிவாய் அலறிடுவான்,மெய்... உன்வீரம் அத்தனையும் உலகத்திடம் காட்டு உற்றபெருமை ஓடிவரும் தன்னைத்தானே மீட்டு சொல்லிவிட்டு வருவதா சுனாமிக்குப் பெருமை- உன் சொந்தம் தவிக்கும்போதெல்லாம் சுழற்றியடி, அஃது அருமை!