Posts

Showing posts from May, 2005

ஏன் ...?

பூங்கொத்து எடுத்து வந்தேன் தோழி- நீயதைப் புறங்கையால் தட்டி விட்டாய்... - உன் புதிர்மொழி புரியவில்லையடி தோழி - நீயென் பூமனத்தைச் சுட்டுவிட்டாய் ஊரார் கண்பட்டு உள்ளில் புண்பட்டதே தோழி- நீ உணர்ந்தும் உணராமல் இருந்துவிட்டாய் - உன் உள்ளத்தின் ஓரிடத்தில் வாழ்ந்த்திருந்தேன் தோழி- நீயதை ஒரு நொடியில் மறுத்துவிட்டாய்... இல்லையில்லை மறைத்துவிட்டாய்...ஏன்...?