எஃது அருமை?

மத்தளமா மனிதனில் தமிழன்?
இருபுறமும் அடிவாங்கி எப்போதும் கிடக்கிறான்!
இருக்கணுமா இனியும் தமிழன்?
பொறுத்தே பொங்கியெழ நேரம் பார்க்கிறான்!

சுருங்கிய நிலைமைக்குச் சுட்டலாமோ விரலை
மங்கிய வாழ்க்கைக்கு மடத்தனந்தான்;மறந்தான்
அறுத்தெரிய வேண்டாமோ எச்சில்உமிழ் வாயை
கருத்துக்களின் வாதங்கள் வெறும் கழுத்தறுப்பே..

அவன்வருவான் இவன்வருவான் அதுவெல்லாம்பொய்
அடிவேரை அறுத்தெரிவாய் அலறிடுவான்,மெய்...
உன்வீரம் அத்தனையும் உலகத்திடம் காட்டு
உற்றபெருமை ஓடிவரும் தன்னைத்தானே மீட்டு

சொல்லிவிட்டு வருவதா சுனாமிக்குப் பெருமை- உன்
சொந்தம் தவிக்கும்போதெல்லாம் சுழற்றியடி, அஃது அருமை!

Comments

தங்கள் தளம் மிகவும் நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள்
முனைவர் இரா குணசீலன் அவர்களே, தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது மனமார்ந்த் நன்றி மலர்கள்.

Popular posts from this blog

பொங்கல் வைப்போம்

உனக்கது பிடிக்குதா சொல்...?