தோராயமாக ...!

நல்லவை நிலைத்திருக்க ...
அல்லவை நினைவழிக்க ...
ஏற்றவழி என் இறைவா
ஏன் இன்னும் சொல்லவில்லை ?

என் நடையின் தவறோ...?
எடுத்தவழி பிழையோ
அடுத்துவந்து துரத்துதய்யா - நான்
வெறுத்துவந்த நினைவு வலி

எவன் கேட்டும் சொல்லாத நீ
இவன் கேட்டா சொல்லி விடுவாய்... ?
இருந்தபோதும் இதய ஓரம்
எழுகிறதே நப்பாசை... !

துல்லியமாய் வேண்டாம்
தோராயமாக வேனும்...!

Comments

Popular posts from this blog

பொங்கல் வைப்போம்

உனக்கது பிடிக்குதா சொல்...?