ஏன் ...?

பூங்கொத்து எடுத்து வந்தேன் தோழி- நீயதைப்
புறங்கையால் தட்டி விட்டாய்... - உன்
புதிர்மொழி புரியவில்லையடி தோழி - நீயென்
பூமனத்தைச் சுட்டுவிட்டாய்

ஊரார் கண்பட்டு உள்ளில் புண்பட்டதே தோழி- நீ
உணர்ந்தும் உணராமல் இருந்துவிட்டாய் - உன்
உள்ளத்தின் ஓரிடத்தில் வாழ்ந்த்திருந்தேன் தோழி- நீயதை
ஒரு நொடியில் மறுத்துவிட்டாய்...
இல்லையில்லை மறைத்துவிட்டாய்...ஏன்...?

Comments

Popular posts from this blog

பொங்கல் வைப்போம்

உனக்கது பிடிக்குதா சொல்...?